
ரிஷிவந்தியம் : தாலிகட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்துக்கு மறுத்ததால், தோழியாக வந்த பெண்ணை, கரம் பிடித்தார் மாப்பிள்ளை. விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிவண்ணன், 25; தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 21; இவர்களுக்கு, ரிஷிவந்தியம் ராஜ நாராயண பெருமாள் கோவிலில், திருமண ஏற்பாடு நேற்று செய்யப்பட்டிருந்தது. இரு குடும்பத்தினரும், காலை, 6:00 மணிக்கு, மணமக்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் கருவறை எதிரே, மணமேடையில் காலை, 8:00 மணிக்கு, மணமக்கள் அமர்ந்தனர். சிங்காரம் குருக்கள் மந்திரங்களை ஓதி, தாலி எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்தார். அப்போது, திடீர் என, மணப்பெண் சுலோச்சனா தாலி கட்டிக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
No comments:
Post a Comment