குஜராத் மாநிலம் பார்தோலியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவர் மேலும் பேசியதாவது:
"காந்தி கொலை செய்யப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய அன்றைய
உள்துறை அமைச்சர் சர்தார் படேல் பரிந்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ். ஒரு நச்சு
சித்தாந்தம். அது நமது நாட்டின் ஆன்மாவை அழித்துவிடும் என்றும் அவர்
எச்சரித்தார்.
இந்த வரலாற்றை பாஜகவினர் படிக்கவில்லை போலும். படேலின் கொள்கைகள் பாஜக
தலைவர்களுக்கு தெரி யாது. அவரைப் பற்றி படிக்க வில்லை, அறிந்து கொள்ளவும்
முயற்சிக்கவில்லை. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக அவரது சிலையை
எழுப்புகின்றனர். நரேந்திர மோடி தன்னை மட்டுமே வளப்படுத்தி கொள்கிறார்.
அவரது ஆட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் இதுவரை 6 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
செய்துள்ளனர்.
மாநிலத்தில் வாழும் 44 ஆயிரம் பஞ்சாப் விவசாயிகள் மிரட்டப்படு கின்றனர்.
மோடியின் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைதன்மை இல்லை. அவரது அரசில்
ஊழல்வாதிகள் பலர் உள்ளனர். ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு
நிறைவேற்றியுள்ளது.
இதேபோல் மேலும் 6 மசோதாக்கள் நாடாளு மன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றை
நிறைவேற்றவிடாமல் பாஜக தடுக்கிறது. ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், குஜராத்தில் தகவல் உரிமை
ஆணையர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவர்கூட நீதிமன்ற உத்தரவால்
நியமிக்கப்பட்டவர். லோக் ஆயுக்தா அமைப்பை தடுத்த நிறுத்த மாநில அரசு வழக்கு
செலவுக் காக இதுவரை ரூ.40 கோடி வரை செலவிட்டுள்ளது" என்றார் ராகுல்
காந்தி.
No comments:
Post a Comment