Wednesday, 23 July 2014

திருடிய ஆடைகளுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மாட்டி கொண்ட கர்ப்பிணி பெண்




மேற்கு பிராங்போர்ட் பகுதியை சேர்ந்தவர்  டேனியல் சாக்ஸ்டோன் ( வயது 27 )  கர்ப்பிணி பெண்  இவர் ஜவுளிகடையில் திருடிய ஆடையை ஆசையாய் அணிந்து பார்த்து  தன்னை தானே போட்டோ எடுத்து பேஸ் புக்கில் பதிவு செய்தார். இதனாலேயே அவர் மாட்டி கொண்டார்

மேற்கு பிராங்க்போர்ட் ஜவுளிகடை ஒன்றில் டேனியல் சாக்ஸ்டோன்  என்ற கர்ப்பிணி பெண்  துணிகள் வாங்க வந்தார். ஆனால் அவர் வந்து விட்டு கடை யின் மறுபக்க வழியாக  சென்று விட்டார் கடை உரிமையாளர் அந்த பெண் சென்ற பிறகு கடையில் இருந்த சில துணிகள் மட்டும் சில அணிகலன்கள் திருட்டு போய் இருப்பது கண்டு பிடிக்கபட்டது.

இதை தொடரந்து மற்றொரு உரிமையாளர் பாதுகாப்பு கேமிராவில் பதிவாகி இருந்த டேனியல் சாக்ஸ்டோன் படத்தை தங்களது  ஜவுளிக்கடை பேஸ் புக் பக்கத்தில் போட்டு  இவர் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும் என பதிவு செய்தார்.பிராங்போர்ட் சிறை ந்கரம் ஆகும் இங்கு மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் குறைவாகவே உள்ளது.

மேலும் சாக்ஸ்டோன் திருடிய ஆடைகளை அணிந்து கொண்டு  புகைப்படம் எடுத்து பேஸ் புக்கில் பதிவு செய்து வைத்து இருந்தார். இதனால் ஜவுலிக்கடையின் பதிவும், சக்ஸ்டோனின் பதிவையும் பார்த்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவ்ல் தெரிவித்தனர். 

இதனால் சில மணி நேரங்களில் சாக்ஸ்டோன் கைது செய்யபட்டார்.

No comments:

Post a Comment