சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்யா (பெயர் மாற்றம்) (12). இவர் இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரபத்திரன் (35). இவரது மகள் விஜி (பெயர் மாற்றம்). சத்யாவும், விஜியும் தோழிகள் இவர்கள் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள்.
நேற்று மாலை சத்யா தனது தோழி விஜி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் வீரபத்திரன் மற்றும் விஜி ஆகியோர் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த சத்யா ஏன் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு வீரபத்திரன், விஜியின் அம்மா வீட்டை பூட்டி விட்டு ஆத்தூர் சென்று விட்டார். சாவி அவரிடம் தான் இருக்கிறது. அவர் வந்தால் தான் வீடு திறக்க முடியும் என்றார்.
தொடர்ந்து வீரபத்திரன் மகளின் தோழியான சத்யாவிடம் என்னுடன் நீ வா, நாம் போய் சாவி வாங்கி வரலாம் என்றார். இதையடுத்து வீரபத்திரன் மாணவி சத்யாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு புறப்பட்டார்.
முல்லை வாடி பகுதியில் மாலை 6 மணியளவில் வீரபத்திரன் மது, புரோட்டா, குளிர்பானம் ஆகியவற்றை வாங்கினார். தொடர்ந்து அவர் மாணவி சத்யாவை முல்லைவாடி பகுதியில் உள்ள பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வீரபத்திரன் மாணவியை மது குடிக்க சொல்லி செருப்பால் பலமாக முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் மாணவியின் ஆடைகளை கழற்ற சொல்லி தாக்கியுள்ளார். பின்னர் வீரபத்திரன், மாணவி சத்யாவை கற்பழித்து உள்ளார்.
அதோடு இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய காமுகன் வீரபத்திரன், இனி இதே போல் அடிக்கடி வரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவி சத்யாவை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு வந்து இரவு 8.30 மணியளவில் துலக்கனூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே இறக்கி விட்டு சென்று விட்டார்.
வீட்டிற்கு சென்ற மாணவி சத்யா, தனது தாயிடம் நடந்த விபரங்களை சொல்லி கதறி அழுதார். மேலும் உடல் முழுவதும் மாணவிக்கு காயம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று காமகொடூரன் வீரபத்திரனை பிடித்து கொண்டு வந்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது தொடர்பாக மாணவி சத்யா போலீசில் ஒரு பரபரப்பு புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காம வெறியனின் பிடியில் சிக்கி காயம் அடைந்த மாணவி சத்யா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment