Wednesday, 23 July 2014

ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது-உ.பி. கவர்னர்

ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால்கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார்.

சமீபத்தில் லக்னோவின் மோகன்லால்கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் இத்தகைய குற்றங்களை ஆண்டவனால்கூட தடுத்து நிறுத்த முடியாது” என்றார் குரேஷி.

உலகம் முழுவதிலும் இருந்து போலீசாரை கொண்டு வந்த உத்தர பிரதேசத்தில் குவித்தாலும் அவர்களால் கற்பழிப்புகளை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment