Thursday, 10 July 2014

வறுமை, கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பு இந்தியாவில்தான் அதிகம்: ஐ.நா. அறிக்கை




வறுமை, கர்ப்பக் கால தாய்-சேய இறப்பு இந்தியாவில் தான் அதிகம் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா வறுமை ஒழிப்பு, கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பை கட்டுப்படுத்த போராடி வந்தாலும், இந்த பிரச்சனைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 'மிலேனியம் அபிவிருத்தி இலக்கு 2014' என்ற அறிக்கையை ஐ.நா.சபை  பொது செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டார். அறிக்கையில், இந்த ஆண்டு அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், குடிசைப்பகுதிகளில் வாழ்வோருக்கு சுகாதார திட்டங்கள், ஆரம்ப கல்வியில் பாலின வேறுபாடு இல்லாமை ஆகிய இலக்குகளை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 2015-ம் ஆண்டில், இதனைத் தாண்டி இன்னும் நிறைய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை நிறைவேற்றப்பட்டால், உலகில் மலேரியா, காசநோய், எச்.ஐ.வி ஆகிய நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறையும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2012-ம் ஆண்டு உலக அளவில் குழந்தை இறப்பு சதவீதத்தில் இந்தியா முதலாவது இடத்தில் இருந்ததது. 14 லட்சம் குழந்தைகள், தங்கள் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்னரே இறந்துபோயினர். தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தை இறப்பு குறைந்துள்ளது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டில் 1,00,000 குழந்தைகள் உயிருடன் பிறந்தால், அதே காலக்கட்டத்தில் பிறப்பின்போது குழந்தை இறக்கும் எண்ணிக்கை 230 ஆக இருந்தது. இவை வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது 14 முறை பெரியது. உலகில் கர்ப்பக் காலங்களில் பெண்கள் இறப்பு சதவீதம், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகின் கர்ப்பக் கால பிறக்கும் குழந்தை இறப்பு மூன்றில் ஒரு பங்கு இந்தியா மற்றும் நைஜீரியாவில் தான் ஏற்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 17 சதவீதமாகவும், நைஜீரியாவில் 16 சதவீதமாக உள்ளது. என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment