அரபு நாடுகளில் நோன்பிருக்கும் டிரைவர்கள், நோன்பை நிறைவு செய்யும் ‘இப்தார்’ நேரம் நெருங்கி விட்டால் ‘மஹ்ரிப்’ தொழுகையை தவற விட்டு விடுவோமோ.. என்ற பதற்றத்தில் தங்களது வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கின்றனர்.
இதே பாணியில் எதிரெதிர் பாதையில் வரும் இரு வாகனங்களும் ஒன்றையொன்று நெருங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துகளும், அவை சார்ந்த உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனைக் கருதி, துபாயை சேர்ந்த அல் இஷான் என்ற தொண்டு நிறுவனம், அந்நாட்டின் பிரதான சாலை வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் நோன்பாளி டிரைவர்களுக்கு இலவசமாக இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment