ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியைக்கு பள்ளியின் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர். வாபஸ் பெற மறுத்ததால் ஆசிரியை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment