Monday, 28 October 2013

தூக்க மாத்திரை கொடுத்துகணவன் கொலை: மனைவி கைது



மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, குடும்பத் தகராறில், கணவனுக்கு, தூக்க மாத்திரை கொடுத்து, கொலை செய்த, மனைவியை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த, செம்பதனிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், கண்ணன், 36; லாரி டிரைவர். இவரது மனைவி தையல் நாயகி, 26. இவர், சீர்காழியில், தனியார் கல்லுாரியில், நர்சிங் படித்து வருகிறார். கடந்த, 1ம் தேதி, கண்ணன், தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புகாரைஅடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.பிரேத பரிசோதனை அறிக்கையில், கண்ணன், அளவுக்கதிகமாக, துாக்க மாத்திரை உட்கொண்டிருந்ததும், அதனால், மரணம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. போலீசார், நேற்று காலை, தையல்நாயகியிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக, கண்ணனுக்கு, தையல்நாயகி தூக்க மாத்திரை கொடுத்து, கொலை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, மர்ம சாவு என, பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தையல்நாயகியை கைது செய்தனர்

No comments:

Post a Comment