இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் குட்டி இளவரசர் ஜார்ஜை பேணி பாதுகாப்பதில் அக்கறையாக உள்ளார்.
முதன்முதலாக லண்டனில் உள்ள ஒரு பள்ளி விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்ட அவர் இன்று காலை காரில் வந்து இறங்கினார். கருப்பு நிற குட்டை பாவாடை அணிந்து 'சிக்' என்று வந்திறங்கிய இளவரசியை தங்களது கேமராக்களில் சிறைபிடிக்க நிருபர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
அவரை வரவேற்ற ஒரு சிறுமி இளவரசிக்கு பூங்கொத்தை அளித்தபோது, அதை பெற்றுக்கொள்ள அவர் குனிந்தார். அந்த நேரம் பார்த்து வீசியடித்த சுழற்காற்றில் குட்டை பாவாடை விரிக்கப்பட்ட குடை போல மேல்நோக்கி பறந்தது.
இந்த அபூர்வ காட்சியை படம் பிடிக்க போட்டோ கிராபர்களுக்குள் கடும் போட்டோ போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
சுதாரித்துக்கொண்ட கேட் மிடில்டன் பாவாடை மேலும் உயர்ந்து விடாதபடி இடது கையால் சரிசெய்தார்.
லண்டன் ஊடகங்களில் மட்டுமின்றி, சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூட இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்த செய்திதான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment