Friday, 24 May 2013

தேர்வில் சாதனை படைத்த பிளஸ்-2 மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி

தேர்வில் சாதனை படைத்த பிளஸ்-2 மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி அளிக்கப்படுகிறது.

மேயர் பதவி வகிக்கப் போகும் அந்த மாணவி பெயர் சுனந்தா கயர்வர். மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா இங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து மாணவியை கவுரவிக்கவும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் வகையில் அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாணவி சுனந்தா மேயர் பொறுப்பு ஏற்கிறார்.

அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளையும் மேயர் ஷோபா யாதவ் செய்து அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.

25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார். தந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment