Tuesday, 28 May 2013

பிணமாக பிரசவித்தவர், குழந்தை பிறந்த பிறகு உயிர் பிழைத்த அதிசயம்

பிணமாக பிரசவித்தவர், குழந்தை பிறந்த பிறகு உயிர் பிழைத்த அதிசயம்
அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசிக்கும் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார்.

கண்கள் இரண்டும் மேல்நோக்கி நிலைகுத்தியபடி, வாயில் இருந்து நுரை தள்ளிய நிலையில் இருந்த எரிக்காவை அவரது கணவரும் சக ஆசிரியைகளும் ஆஸ்பத்திரிக்கு அள்ளிச் சென்றனர்.

ஆஸ்பத்திரியை சென்றடைவதற்குள் எரிக்காவின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது.

அவர் இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக ‘சிசேரியன்’ ஆபரேஷன் மூலம் வெளியே எடுத்தனர்.

இது, ஏறக்குறைய பிணத்துக்கு பிரசவம் பார்த்த கதை போன்றதுதான் என்றாலும், அதிர்ட்வசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது.

குழந்தையை வெளியே எடுத்த பின்னர், எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த டாக்டர்கள், அவரது இதயம் துடிப்பதை அறிந்து திகைத்து போனார்கள்.

இதனையடுத்து, அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி இயல்பு நிலைக்கு வரவழைத்தனர்.

இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய டாக்டர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றனர்.

No comments:

Post a Comment