ரிஷிவந்தியம் : தாலிகட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்துக்கு மறுத்ததால், தோழியாக வந்த பெண்ணை, கரம் பிடித்தார் மாப்பிள்ளை. விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிவண்ணன், 25; தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 21; இவர்களுக்கு, ரிஷிவந்தியம் ராஜ நாராயண பெருமாள் கோவிலில், திருமண ஏற்பாடு நேற்று செய்யப்பட்டிருந்தது. இரு குடும்பத்தினரும், காலை, 6:00 மணிக்கு, மணமக்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் கருவறை எதிரே, மணமேடையில் காலை, 8:00 மணிக்கு, மணமக்கள் அமர்ந்தனர். சிங்காரம் குருக்கள் மந்திரங்களை ஓதி, தாலி எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்தார். அப்போது, திடீர் என, மணப்பெண் சுலோச்சனா தாலி கட்டிக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
Thursday, 23 May 2013
மணப்பெண்ணின் தோழியாக வந்தவளை திருமணம் செய்த ஆண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment