Sunday, 19 January 2014

சிறார் பாலியல் துஷ்பிரயோகம்:2 ஆண்டுகளில் 400 பாதிரியார்கள் நீக்கம்!

vatican

வாடிகன்: சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வாடிகான் கத்தோலிக்க சபையின் தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் போப் பெனடிக்ட், 2011 மற்றும்  2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியார்களை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரியார்களை காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகம் என்று கருதப்படுகிறது.ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரானவாடிகான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வாடிகான் சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரியார்களை வேறு கத்தோலிக்க பங்குப்பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளது தொடர்பாக வாடிகான் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment