Friday, 16 August 2013

மனைவியை கொன்றவற்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றம்



சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாசி அல்-கைபாரி என்பவர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்ததுடன் எரித்து கொலை செய்துள்ளார்.
இந்த குற்றத்திற்காக அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 58 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment