Friday, 14 June 2013

தோழிகளின் நிர்வாணப்படத்தை காதலனுக்கு ஆன்லைனில் அனுப்பிய பெண்

 


உடன் படிக்கும் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து இன்டர்நெட் மூலம் லண்டனில் படிக்கும் காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழங்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்குமார்(22). இவர் லண்டனில் எம்பிஏ படித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் பத்தனம்திட்டா அருகே கோன்னியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்தார். அப்போது இவருக்கும் அதே கல்லூரியில் படித்த புனலூரைச் சேர்ந்த மாணவி நிமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த வருடம் சுஜித்குமார் எம்பிஏ படிப்பதற்கு லண்டன் சென்றார்.

நிமிதா எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மாரம்பிள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மாரம்பிள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அங்குள்ள லாட்ஜில் நிமிதாவும் 4 மாணவிகளும் தங்கி இருந்தனர். நிமிதா தனது லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்கிருந்த மற்ற மாணவிகள் லேப்டாப்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அதில், கல்லூரியில் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகள் இருந்தன. இதுகுறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர். அவர் பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிமிதாவிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment