Tuesday, 18 June 2013

இந்துத்துவா மூலமாகவே நாட்டை மாற்ற முடியும் : ஆர்எஸ்எஸ்



இந்துத்துவா மூலமாகவே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு மாற்ற முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மீரட்டில் இன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், நமது நாட்டை இந்துத்வா மூலமாகவே மாற்ற முடியும்.
யாருக்கும் பிடித்தாலும், யாருக்கு பிடிக்காவிட்டாலும் இந்துத்துவா ஒன்றுதான் ஒரே வழி, நமது நாட்டை நல்ல வழிக்கு மாற்ற. இதுவரை நாம் தலைவர்களையும், கொள்கைகளையும் மாற்றிவிட்டோம். ஆனால் எதுவும் எதையும் மாற்றவில்லை. நாட்டை மிகுந்த சாக்தி வாய்ந்ததாக மாற்றுவதற்கு அரசியல் மட்டுமே வழியல்ல. இந்துத்துவா மட்டுமே அதனைச் செய்யும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment