கர்ப்ப பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அது உண்மை என தற்போது விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து படிக்க செய்தனர். அவர்கள் அக்கதையை சத்தம் போட்டு படித்தனர். அந்த நேரம் வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது, வயிற்றில் வளரும் குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து இருந்தது. மேலும் அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது. அதன் மூலம் தாயின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கர்ப்ப பையில் வளரும் குழந்தை கவனிப்பது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment