
இங்கிலாந்தில் 9 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் குட்டை பாவாடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வோஸ்டர்ஷயர் பகுதியில் ரெட்டிச் என்ற இடத்தில் உள்ளது இங்கிலாந்து வாக்வுட் சர்ச் நடுநிலை பள்ளி.
மிகவும் புகழ்பெற்ற இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், ஒன்பது வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் குட்டை பாவாடை அணிந்து வரக் கூடாது என்று அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு செப்டம்பர் 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பள்ளி மாணவர்களும், மாணவிகளும் 2014ம் ஆண்டு முதல் ஒரே மாதிரியான பேன்ட் அணிந்து வர வேண்டும் என்றும், இருதரப்பினரும் முழுக்கை சட்டை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், சிறுமிகள் அநியாயத்துக்கு மிகமிக குட்டையாக பாவாடை அணிந்து வருகின்றனர்.
ஸ்கர்ட்டை கொஞ்சம் நீளமாக அணிந்து வாருங்கள் என்று கூறினால் கேட்பதில்லை. ஒன்பது வயதிலேயே மாணவிகள் இளம் பருவ தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.
இதனால் அவர்கள் இளம்பெண்கள் போல தோற்றம் அளிக்கின்றனர். எனவே குட்டை பாவாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment