Thursday, 1 August 2013

16 வயது சிறுமியை கொன்று பிணத்துடன் உறவு கொண்ட வாலிபர்



இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை குத்திக் கொன்று, பிணத்துடன் வாலிபர் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்த சாஷா மார்ஸ்டன்(வயது 16) என்பவருடன், டேவிட் மின்டோ(வயது 23) என்ற நபர், பேஸ்புக் மூலம் நட்பாக பழகியுள்ளார்.
இதனையடுத்து தனது தோழியின் ஓட்டலில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி, சாஷாவை அழைத்துள்ளார்.
அவரும் கிளம்பி வரவே, ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு சாஷா அனுமதிக்காத காரணத்தினால், கத்தியை எடுத்து குத்தியுள்ளார். தலையில் மட்டும் 58 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.
இருப்பினும் வெறி அடங்காமல், இறந்த உடலுடன் உறவு கொண்டுள்ளார். இதனையடுத்து சாஷாவை தீ வைத்து கொளுத்தியதுடன், எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி கிராப்டன் ஓட்டல் அருகே போட்டு விட்டார்.
அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், டேவிட்டை கைது செய்தனர்.

No comments:

Post a Comment