Saturday, 27 April 2013

படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 88 பேர் சிக்கினர்


மங்களூர் : மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 37 குழந்தைகள் உள்பட 88 இலங்கை தமிழ் அகதிகள் பிடிபட்டனர்.
மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீன்பிடி படகு ஒன்றில் கூட்டமாக இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இலங்கை அகதிகள் என தெரிந்தது. விசாரணையில், இவர்கள் அனைவரும் பவானி சாகர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் என உறுதியானது. மொத்தம் 5 குழந்தைகள் உட்பட 88 பேர் படகில் இருந்தனர். இவர்கள் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இவர்களைஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக மங்களூரில் தங்கியிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கும்மிடிபூண்டியை சேர்ந்த சோரிங்கிடன், நிக்கிசன் பார்வின், சென்னை முகப்பேரை  சேர்ந்த தவராசா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அகதிகள் அனைவரும் 2 தனி பஸ்கள் மூலம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment