Thursday, 25 April 2013

மாணவியுடன் செக்ஸ்உறவு கொண்டஆசிரியருக்கு சிறை தண்டனை



சிங்கப்பூர்: தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட, இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றியவர் அரவிந்த் மேனன்,25. இவர் தன்னிடம் படித்த, 14 வயது மாணவியுடன் நட்பாக பழகி, செக்ஸ் உறவு கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி, அரவிந்தை விட்டு விலக நினைத்தாள். ஆனால், அந்த பெண்ணுடன் உறவு கொண்ட ஆபாச காட்சிகளை காட்சி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் மீது, 2009ம் ஆண்டு, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, சிவசண்முகம், மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட அரவிந்த், அந்த பெண்ணுடன் உறவு கொண்ட காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக, ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். அரவிந்த் மீது, மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

No comments:

Post a Comment