பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளருக்குத் திருமண அந்தஸ்தும், குழந்தையைத்
தத்தெடுக்கும் உரிமையும் தரலாம் என்று நேற்று பிரெஞ்சு மேலவையில் மசோதா
தாக்கலானது.
இதனால் வெகுண்டெழுந்த ஓரினச் சேர்க்கை எதிர்ப்பாளர்கள்
ஜனாதிபதி ஹேலாண்டுக்கு ரத்தவெறி பிடித்து அலைவதாகக் கண்டனக் குரல்
எழுப்பினர்.
மேலும் வருகின்ற மே 26ம் நாள் அன்று பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம்
நடத்தப் போவதாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் அறிவித்திருந்தனர்.
இது குறித்து மைய - வலது UMP கட்சியைச் சேர்ந்த கிறிஸ்ட்டியன்
ஜேக்கப்(Christian Jacob) கூறுகையில், ஜனாதிபதி பிரெஞ்சு மக்களுடன்
கடுமையாக மோதுகிறார் என்றும் இது ஒரு உள்ளூர்ப் போர் எனவும் சாடிவுள்ளார்.
No comments:
Post a Comment