Sunday, 7 July 2013

சவுதியில் வேகமாக பரவும் விஷக் கிருமி: இதுவரை 38 பேர் பலி




சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகினர்.
சவுதி அரேபியாவில் வேகமாக பரவி வரும் விஷக் கிருமி தொற்று நோய்க்கு இருவர் பலியாகி உள்ளனர்.
சவுதியில் சார்ஸ் என்ற விஷக்கிருமி வேகமாக பரவி வருகிறது.
இந்நோயின் முதற்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
பின்னர் இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளிக்கு மரணத்தை ஏற்படுத்தும்.
சவுதியில் மட்டும் இந்த தொற்று நோய் கிருமியால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக 36 பேர் பலியாகி உள்ளதால், நேற்று இறந்த 2 பேரையும் சேர்த்து மொத்தம் 38ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment