Monday, 29 July 2013

ஓரினச் சேர்க்கையாளரை சமூகத்தில் ஏற்க வேண்டும்-போப் பிரான்சிஸ்

பிரேசிலியா : ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண் மதபோதகர்களை உருவாக்க தேவாலயங்கள் மறுத்துவிட்டன. ஆனால், தேவாலயங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் பெண்களின் பங்கை கட்டுப்டுத்தக்கூடாது. 

அதிகளவில் இருக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒருவர், ஓரினச் சேர்க்கையாளராக இருந்து, அவர் கடவுள் பக்தி உடையவராகவும், நல்ல எண்ணம் உடையவராகவும் இருந்தால், அவர்களை தீர்மானிக்க நான் யார்? இதை கத்தோலிக்க கிறிஸ்துவம் தெளிவாக விளக்குகிறது. ஒரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் இருந்து பிரித்து வைக்கக் கூடாது, அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். நாம் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு போப்பாண்டவர் கூறினார்.

No comments:

Post a Comment