Sunday, 7 July 2013

சீனாவில் தாய்ப்பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பும்

தாய்ப்பால் அருந்தும் செல்வந்தர்கள் – சீனாவில் சர்ச்சை

Posted by Kattankudi Web Community (KWC) on 07/07/2013

-அபூஹக்-

தென் சீன நகரான ஷென்ஸென்னில் பால் கொடுக்கும் தாதியர்களை வாடகைக்கு அமர்த்தி செல்வந்தர்கள் தாய்ப்பால் அருந்தி வருகின்றனர். இந்த விடயம் பெரும் வெறுப்புணர்வையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய பணக்காரர்களில் புதிய விளையாட்டு இதுவென ஆயிரக்கணக்கான இணையதள சிறிய வலைப்பூ பயனர்கள் கண்டனங்களை குவித்துள்ளனர். பால் கொடுக்கும் தாதியர்களை வாடகைக்கு வழங்கும் முகவர் நிறுவனம் அண்மையில் குழந்தை பிரசவித்த வறிய பெண்களை தேடி அவர்களுக்கு பொருளாதாரரீதியான உதவியை செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தை பிரசவித்த வறிய தாய்மார் 2000 டொலர் தொடக்கம் 3000 டொலர் வரையான விலையில் ஒரு மாதத்தில் சில நாட்கள் தொடக்கம் சில வாரங்கள் வரை தமது சேவையினை வழங்குகின்றனர்.

வளர்ந்தவர்களான வாடிக்கையாளர்கள் நேரடியாக பாலினை அருந்திக் கொள்ளலாம் அல்லது அது அவர்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகக் கருதினால் அதற்கான பம்பியினைப் பயன்படுத்தி வெளியே எடுக்கப்பட்ட பாலினைப் பருகலாம் என பால் கொடுக்கும் தாதியர்களை வாடகைக்கு வழங்கும் முகவர் நிலையத்தின் உரிமையாளரான லின் ஜுன் தெரிவித்ததாக ஸின்ஸின்யூ உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதத் தாய்ப்பால் ஆரோக்கியத்திற்கான விஷேடமான உயிர்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும் விஷேடமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு சிறந்தது என சில சீனர்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இணையத்தள பாவனையாளர்கள் இதனை ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட செயல் மாத்திரமல்ல நாட்டின் பணக்காரர்களின் இறுமாப்பினையும் பெண்களை புறக்கணிப்புச் செய்யும் தன்மையினையும் வெளிக்காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.

‘பெண்களை நுகர்வுப் பொருளாகக் கருதுவது அத்துடன் சீனாவின் செல்வந்தர்களின் கீழ் நிலை அடைந்துள்ள ஒழுக்கப் பிரச்சினைகளோடு இதுவும் இணைந்துள்ளது’ என எழுத்தாளரும் சீன ஊடகங்களில் தொடராக கருத்துக்களை வெளியிடுபவருமான காஓ பயோயின் தனது வலைப்பூல் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் காரணமாக ஸின்ஸின்யூ வர்த்தக உரிமங்களை ஷென்ஸென் உள்ளூராட்சி நிறுவனம் இரத்துச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எனினும் இது தீர்வல்ல ஏனெனில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது இந்தத் துறையில் பல முகவர் நியைங்கள் செயற்படக் கூடும் என இணையப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன.

இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர்.

தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர்.

இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது.

இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு விலைக்கு தயார் செய்கின்றனர்.

இதில் கணிசமான பங்கை அவர்கள் எடுத்து கொண்டு மீதமுள்ள சொற்ப பணத்தை ஏழை தாய்மார்களுக்கு வழங்குகின்றனர்.

பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment