Tuesday, 24 June 2014

சதாம் ஹுசைன் அன்று உதிர்த்த வார்த்தைகள்… இன்று உண்மையானது


ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அன்று மண்ணில் உதிர்த்த வார்த்தைகள் இன்று நிறைவேறிவிட்டது.
தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள் இதோ,
நீ… அமெரிக்காவின் பேச்சினை கேட்டு எனக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளாய். ஆனால் உன்னுடைய மரணம் நிகழப்போவது என்னுடைய மக்கள் கையால் தான் என்பதை மறந்துவிடாதே என்று கூறியுள்ளார்.
அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இன்று. ஆம், சதாம் ஹுசைனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.
சதாமிற்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது.

No comments:

Post a Comment