Friday, 13 September 2013

பள்ளி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய நிறுவனம்



பிரான்ஸ் நாட்டில் இரு பள்ளி மாணவிகள் பணத்திற்காக விபச்சார தொழிலுக்கு ஆளான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் சில மாதங்களுக்கு முன்னாள் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் தனியார் அலுவலகத்திற்கு இணையதளத்தின் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
பின்பு இணையதளம் மூலம் பணிநியமனத்தை பெற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாணவி ஒருவரின் மூலம் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் அங்கு சென்று விசாரித்ததில் பள்ளி மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மாணவி ஒருவரிடம் விசாரித்ததில் எங்களுக்கு இரண்டு இரவுகளுக்கு 50,000 யூரோ கொடுத்ததாகவும் அதனை வைத்து நாங்கள் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்க செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மொனேகோ அலுவலகத்தின் வாகன ஒட்டுனரிடமும் மற்றும் அவரின் வீட்டிலும் சோதனை நடத்தியதில் காலணிகள் மற்றும் செக்ஸ் பொம்மைகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பாக மொனேகோ அலுவலகத்திலும், மாணவிகளின் தோழிகளிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment