திருவனந்தபுரம்: ஒன்பது மாத பெண் குழந்தையின் பிறப்புறுப்பில், பேனாவை நுழைத்து கொடுமைப்படுத்திய, 23 வயது தாய் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், 24ம் தேதி, ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று, பிறப்புறுப்பில் ரத்தம் வழியும் நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதைப் பார்த்த டாக்டர்கள், குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டிருக்கலாம் என, நினைத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்திய போது, குழந்தையின் பிறப்புறுப்பில், பேனாவை நுழைத்து, அவர் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. தன்னுடன் சில மாதங்கள் வாழ்ந்து விட்டு, பிரிந்து சென்ற, குழந்தையின் தகப்பனை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக, அந்தப் பெண் கூறினார். அவர்
மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
No comments:
Post a Comment